Breaking News

புதுச்சேரி | லைசென்ஸ் இல்லாமல் சிறுவர்கள் வாகனம் இயக்கினால் பெற்றோரின் வாகன பதிவு சான்று ஓராண்டு ரத்து

புதுச்சேரி: ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் வாகனத்தை ஓட்டினால் பெற்றோருக்கு சிறையுடன் வாகனத்தின் பதிவு சான்று ஓராண்டு ரத்தாகும். ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவகுமார் இதுதொடர்பாக கூறியதாவது: புதுவையில் சமீபகாலமாக சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டிச் செல்வது அதிகரித்து வருகிறது. இவர்கள் வாகனத்தை இயக்க சட்டப்படி அனுமதி இல்லை. இச்சிறுவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் வாகனத்தை ஓட்டுவதாக தெரிகிறது. இவ்வாறு வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு 3 வருடம் வரை சிறை தண்டனையும் மற்றும் ரூ.25,000/-அபராதமும் மற்றும் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் 12 மாதம் வரை ரத்து செய்யப்படும். மேலும் வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமம் தகுதி ரத்து மற்றும் சிறார் சட்டத்தின் கீழ் வழக்கும் தொடரப்படும். எனவே, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0edHWJg
via

No comments