அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து பள்ளப்பட்டி நகர்மன்ற 15வது வார்டு உறுப்பினர் ராஜினாமா
கரூர்: கரூர் மாவட்டம் பள்ளபட்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. திமுக கூட்டணி வார்டு உறுப்பினர்கள் 22 பேர், சுயேட்சைகள் 5 பேர் உள்ளனர். திமுகவை சேர்ந்த முனவர்ஜான் நகர்மன்றத் தலைவராகவும், தோட்டம் பஷீர் துணைத்தலைவராகவும் உள்ளனர்.
பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் முனவர்ஜான் தலைமையில் நகர்மன்ற கூட்டம் இன்று (ஏப். 28) நடைபெற்றது. கூட்டத்தில், வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதி கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்போது, திமுகவை சேர்ந்த 15-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முகமது ஜமால் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நகராட்சி ஆணையரிடம் கடிதம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OMVkuyA
via
No comments