Breaking News

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 8-ல் வெளியாகிறது - தேர்வுத் துறை அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்.3-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 8.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்.10-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகள் நடந்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ijzmW7u
via

No comments