Breaking News

50 வயதுக்கு மேற்பட்ட அரசு வாகன ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை - அரசாணை வெளியீடு

சென்னை: மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரையை ஏற்று, 50 வயதுக்கு மேற்பட்ட அரசு வாகன ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மனிதவள மேலாண்மைத் துறை செயலர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த 1996-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு வாகனங்களின் ஓட்டுநர்கள்அனைவருக்கும் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்கியதுடன், 40 வயதுக்கு கீழ் பரிசோதனை வேண்டாம் என்றும், 40 முதல் 52 வயது வரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 52 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறையும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rKNh58v
via

No comments