பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை - முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுப்போம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ‘‘கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இயங்கிவரும் மழலையர் பள்ளியில் படிக்கும் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அப்பள்ளி தாளாளரை காவல் துறையினர் நேற்று அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவர் திமுகவை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். விருத்தாசலம் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் எம்ஆர்ஆர் ராதாகிருஷ்ணனும் இந்த விவகாரம் குறித்து பேசி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qCWKLyP
via
Post Comment
No comments