பிடிஆர் ஆடியோ விவகாரம் | மத்திய அரசின் புலன் விசாரணைக்கு வலியுறுத்துவோம் - எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி
மதுரை: ‘சர்ச்சைக்குரிய ஆடியோவில் பேசியிருப்பது நிதி அமைச்சர்தான். இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வர மத்திய அரசின் புலன் விசாரணைக்கு வலியுறுத்த உள்ளோம்’ என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி தெரிவித்தார்.
மதுரை விமானநிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. திமுக தொழிலாளர்களுக்கு விரோதமாக இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலினே இந்தச் சட்டத்தை எதிர்த்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D0LFpBc
via
No comments