Breaking News

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவையாக இருந்ததால் சந்தீப் சர்மா மீது நம்பிக்கை வைத்திருந்தேன்: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் வருத்தம்

ஜெய்ப்பூர்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 17 ரன்களை பாதுகாக்க வேண்டியது இருந்ததால் சந்தீப் சர்மா மீது நம்பிக்கை வைத்திருந்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த ஆட்டத்தில் 215 ரன்கள் இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தன. இந்த ஓவரை ராஜஸ்தான் அணியின் மிதவேகப் பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா வீசினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவையாக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DdEbpP4

No comments