Breaking News

கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் - மலைக்கிராம மக்கள் வெளியேற முடியாமல் தவிப்பு

கொடைக்கானல் அருகே காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சின்னூர், பெரியூர் மலைக்கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் தாலுகாவைச் சேர்ந்த மலைக்கிராமங்களான சின்னூர் மற்றும் பெரியூரில் சாலை வசதிகள் இல்லை. இவ்விரு மலைக்கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VPswN28
via

No comments