Breaking News

வட்டார கல்வி அதிகாரி தேர்வு அறிவிப்பு வெளியாவதில் தாமதம்: ஆசிரியர் தேர்வு வாரியம் மீது அதிருப்தி

சென்னை: வட்டார கல்வி அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் வராததால் பி.எட்.பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழக தொடக்க கல்வித் துறையில் வட்டார கல்வி அதிகாரி (பிஇஓ) பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன. அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக வட்டார கல்வி அதிகாரி ஆகின்றனர். நேரடி நியமனத்துக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு நடத்துகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில் பட்டப் படிப்பு, பி.எட். பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Tusimec
via

No comments