கண்ணாடி டம்ளரில் தேநீர், காபி விற்பனை: வேலூரில் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் வசூலிப்பு

வேலூர் மாநகராட்சியில் விதி களை மீறி கண்ணாடி டம்ளரில் தேநீர், காபி விற்பனை செய்த கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் வசூலித்தனர்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி, கடந்த திங்கட்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் மூடப்பட்டதுடன் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மளிகை மற்றும் காய்கறி கடைகளில் விற்பனையின்போது 50 சதவீதம் பேர் மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QG0O1g
via

No comments