சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட வணிகர்களுக்கு 10 நாட்கள் அவகாசம்: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கைவிட, வணிகர்களுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. கரோனா பரவல் தடுப்பு பணிகள் காரணமாக, பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கவனம் செலுத்தவில்லை. தற்போது தொற்று பரவல் குறைந்த நிலையில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவது தீவிரமாக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Dk50HA
via

No comments