கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் மணிமண்டபம், சிலை திறப்பு: `காங்கிரஸின் விடிவெள்ளி’ என கே.எஸ்.அழகிரி புகழாரம்
``தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் விடிவெள்ளியாக வாழ்ந்து மறைந்தவர் வசந்தகுமார்” என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்பியும், வசந்த் அன் கோ நிறுவனருமான எச்.வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது குடும்பத்துக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு அவருக்கு மணிமண்டபமும், நுழைவுவாயிலில் முழுஉருவச் சிலையும் அமைக்கப்பட்டுஉள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WrK7da
via
Post Comment
No comments