நெல்லை மாவட்டத்தில் கனமழையால் வீடு இடிந்து குழந்தை மரணம்: தாமிரபரணி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையால் களக்காட்டில் வீடு இடிந்து 3 வயது குழந்தை உயிரிழந்தது. தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத் தில் நேற்று காலை 8 மணி யுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட் டையில் 107 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பலத்த மழையால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு கால்வாய்கள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3repn5t
via
Post Comment
No comments