செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்துவரும் திட்ட பணிகளை தலைமை செயலர் வெ.இறையன்பு ஆய்வு
பூந்தமல்லி: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்து வரும் மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட திட்டப் பணிகளை பார்வையிட்ட தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, குடியிருப்புகளில் மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி பகுதியில் 29 இடங்களில் ரூ.89 கோடியே 64 லட்சம் செலவில் 25 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நடைபெற உள்ள இடங்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று பார்வையிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/R9HjTl5
via
Post Comment
No comments