ஆளுநர் பாதுகாப்பில் சமரசம் செய்ய மாட்டோம் - சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: ஆளுநர் விவகாரத்தில் இதுதான் சந்தர்ப்பம் என நினைத்து அரசியல் செய்ய நினைக்கின்றனர். ஆளுநரின் பாதுகாப்பில் சமரசம் செய்ய மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். முன்னதாக, ஆளுநர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மயிலாடுதுறை சென்று திரும்பியபோது நடந்த சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ‘‘மயிலாடுதுறை சென்று திரும்பும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தை ஆளுநரின் கார் கடந்தபோது, அதன் மீதும், பாதுகாப்பு அதிகாரிகள் கார் மீதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசியும், கம்புகளை வீசியும் தாக்கியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு காவல்துறையே பாதுகாப்பு அளித்துள்ளது. ஆளுநர் பாதுகாப்பில் தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. தாக்குதல் நடத்த திட்டமிட்டதை உளவுத்துறை முன்கூட்டியே கணிக்கவில்லை. எனவே, இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்’’ என்று கூறிவிட்டு அவையில் இருந்து வெளியேறினார். அவருடன் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய் தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DR78jwZ
via
Post Comment
No comments