Breaking News

விருத்தாசலம் | இரும்புக் கடையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள் - சார் ஆட்சியர் விசாரணை

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள்கள் பழைய இரும்புக் கடையில் இருந்ததால் அவற்றை சார் ஆட்சியர் பறிமுதல் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக ரூ.323 கோடி செலவில், விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் விருத்தாசலம் ஆலடி சாலையில் தனியார் இரும்புக் கடையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்கள், புத்தம் புதிதாக, ஸ்டிக்கர் கூட பிரிக்காமல், பத்துக்கும் மேற்பட்ட சைக்கிள்கள் குவிந்து இருந்துள்ளது. இதைக் கண்ட சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2qO1zcf
via

No comments