Breaking News

ஸ்ரீவில்லிபுத்தூர் | எல்ஐசி சந்திப்பில் ஒளிரும் விளக்கு, எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் எல்ஐசி சந்திப்பு வளைவு பகுதியில் எச்சரிக்கை பலகை இல்லாதது மற்றும் சென்டர் மீடியனில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததால் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக தென்காசி, மதுரை, தேனி, திருநெல்வேலி, கொல்லம் ஆகிய நகரங்களுக்கு 24 மணி நேரமும் ஆயிரகணக்கான வாகனங்கங்கள் சென்று வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் எல்ஐசி சந்திப்பு அருகே வளைவு பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. இந்த சென்டர் மீடியன் மிகவும் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவு பகுதியில் எச்சரிக்கை பலகைகள் இல்லாததது மற்றும் சென்டர் மீடியனில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் பொறுத்தப்படாததால் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JBhTqws
via

No comments