Breaking News

‘முக்கியமான ஆட்டத்தில் வெற்றி’ - மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்துக்கு பின் சிஎஸ்கே கேப்டன் தோனி

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே 2-வது இடத்துக்கு முன்னேறியது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று பிற்பகலில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்கவில்லை. மாறாக இஷான் கிஷனுடன், கேமரூன் கிரீன் களமிறங்கினார். ஆனால் இந்த வியூகம் மும்பை அணிக்கு கைகொடுக்கவில்லை. ஏனெனில் முதல் 3 ஓவர்களுக்கு உள்ளேயே இவர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XLAxVZh

No comments