இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் 1.25 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு: காடேஸ்வரா சுப்பிரமணியம் தகவல்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து முன்னணி சார்பில், மாநிலம் முழுவதும் 1.25 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடப்புஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 10-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்துமுன்னணி அமைப்பின் சார்பில், மாநிலம் முழுவதும், 1.25 லட்சம்இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்தப்படும். விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவதற்கு இந்த அரசு ஒத்துழைப்பு அளித்து, அனுமதி வழங்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kCEhh8
via

No comments