இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: 5 'ஸ்பின்னர்களை' சேர்த்த நியூசிலாந்து அணி
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியில் 5 சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இம்மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர் போட்டிகள் மூன்றிலும் டெஸ்ட் போட்டிகள் இரண்டிலும் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கும் நிலையில் டெஸ்ட் தொடர் நவம்பர் 25ஆம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. கேன் வில்லியம்சன் தலைமையிலான 20 வீரர்கள் கொண்ட அணியில் மிட்சல் சான்ட்னர், அஜாஸ் பட்டேல், கிளென் பிலிப்ஸ், வில் சாமர்வில், ரச்சின் ரவீந்திரா ஆகிய 5 சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், காலின் டி கிராந்தோம் ஆகியோருக்கு அவர்கள் கோரிக்கைப்படி ஓய்வு தரப்பட்டுள்ளது. நியூசிலாந்து விக்கெட் கீப்பராக டாம் பிளன்டல் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3q4yghr
via
Post Comment
No comments