Breaking News

குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு சம்பவம்; உண்மை குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: புதுக்கோட்டை வேங்கைவயலில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்தது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WJ1tb9d
via

No comments