Breaking News

மும்பை: சொந்த வீட்டில் நகையை திருடி காதலனுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் - காதலன், நகைக்கடைக்காரர் கைது

மும்பை அருகில் உள்ள தானே பகுதியை சேர்ந்த மைனர்பெண் ஒருவர், `தனது ஆண் நண்பர் ஒருவர் தன்னை ஆபாச படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியதால் அவருக்கு வீட்டில் இருந்து தங்க நகைகளை எடுத்துக்கொடுத்தேன்’ என்று கூறி போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் அப்பெண் சொன்ன வாலிபரை பிடித்துச்சென்று விசாரித்த போது அப்படி ஏதும் நடக்கவில்லை என்பது தெரிய வந்தது.

இது குறித்து உதவி போலீஸ் கமிஷனர் நிலேஷ் சோனாவானே கூறுகையில், ``சம்பந்தப்பட்ட பெண் தங்க நகையை கொடுத்ததாக சொன்ன நபர் அதனை விற்பனை செய்யவில்லை என்று தெரிந்தவுடன் மீண்டும் அப்பெண்ணிடம் விசாரித்தோம். இதில் அப்பெண் தன்னையும், தனது காதலனையும் காப்பாற்றுவதற்காக நாடகமாடியது தெரிய வந்தது. அப்பெண் தனது வீட்டில் தங்க நகைகளை திருடி மற்றொரு காதலனிடம் கொடுத்துள்ளார்.

கைது

அந்த காதலன் தங்க நகைகளை ரூ.53 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார். அப்பெண்ணிற்கும், அவரின் காதலனுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் வந்துள்ளது. இப்பிறந்தநாளை கொண்டாட வீட்டிலிருந்து அப்பெண் தங்க நகைகளை திருடி காதலனிடம் கொடுத்துள்ளார். தங்க நகைகளை வாங்கிச்சென்ற 18 வயது காதலனும், அதனை விலைக்கு வாங்கிய நகைக்கடைக்காரரும் கைது செய்யப்பட்டுள்ளார். விற்பனை செய்யப்பட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/DEbdnTN

No comments