Breaking News

சேலம் | சிவராத்திரி விழாவை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு: குண்டு மல்லி கிலோ ரூ.1,600க்கு விற்பனை

சேலம்: சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து குறைவாக உள்ள சூழலில், சிவராத்திரி மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது. நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.1,600 விலையில் விற்பனையானது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே வஉசி பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. பூ மார்க்கெட்டுக்கு வீராணம், வலசையூர், கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பல்வேறு வகையான பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்து, விற்று செல்கின்றனர். வஉசி பூ மார்க்கெட்டில் வெளியூர், வெளிமாவடங்களை சேர்ந்தவர்கள் மற்றும் சேலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/krcnIj1
via

No comments