Breaking News

சிவகங்கை கனிம ஆலையில் 1,000 டன் கிராபைட் தேக்கம் - ஒப்பந்த நிறுவனம் கொள்முதல் செய்ய மறுப்பு

சிவகங்கை: சிவகங்கை கிராபைட் தொழிற்சாலையில் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் கிராபைட்டை கொள்முதல் செய்ய மறுத்து வருவதால் 1,000 டன் தேக்கமடைந்துள்ளது.

சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் தமிழ்நாடு கனிம நிறுவனம் சார்பில் 1994 முதல் கிராபைட் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் சராசரியாக 16 முதல் 28 டன் வரை கிராபைட் தயாரிக்கப்படுகிறது. பென்சில், உராய்வுத் தடுப்பான்கள், தங்கம், இரும்பு போன்ற உலோகங்களை உருவாக்கும் உலை, ராக்கெட் மற்றும் விமானத்தில் பொருத்தப்படும் அதிக வெப்பத்தை தாங்கும் பொருட்களை தயாரிக்க கிராபைட் பயன்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8eXWH2S
via

No comments